←இல்வாழ்க்கை

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிகுழந்தைகள்

தாய் தந்தையர்→

 

 

 

 

 


439227குடும்பப் பழமொழிகள் — குழந்தைகள்தியாகி ப. ராமசாமி

 

 


குழந்தைகள்

 தகப்பனாவதில் சிரமம் ஒன்றுமில்லை.  - துருக்கி  
மூன்று பெண்களுக்கு அப்பால் பிறந்த பையன் பிச்சை

யெடுப்பான்; மூன்று பையன்களுக்கு அப்பால் பிறந்த பெண் இராஜ்யத்தை ஆள்வாள்.  - இந்தியா  உன் மகன் நல்லவனானால், நீ ஏன் சேமிக்க வேண்டும்? உன் மகன் தீயவனானால், (அவனுக்காக) நீ ஏன் சேமித்து வைக்க வேண்டும்?  -( ,, ) 
இருண்ட வீட்டின் ஒளி-மகன். குழந்தையின் ஓட்டம் தாய்வரைக்கும்.  -( ,, ) 
பதினாறு வயது வரை மகன், அதற்கு மேல் தோழன்.  -( ,, )  
குழந்தைகள் இல்லாத வீடு சுடுகாடு.  -( ,, ) 
பிரியமுள்ள தந்தையரும் தாயாருமே உண்டு, பிரியமுள்ள பிள்ளைகளும் பெண்களும் இல்லை.  சீனா  
பெண் பிறக்கும் பொழுது வெளியே பார்த்துக்கொண்டு

வருகிறாள், பையன் பிறக்கும் பொழுது உள்ளே பார்த்துக் கொண்டு வருகிறான்.  -( ,, )  வானத்திற்கு மணி சூரியன், வீட்டுக்கு மணி குழந்தை.
 -( ,, )  
குழந்தையில்லாத செல்வன் சீமானல்லன்; செல்வமில்லாது குழந்தைகளை மட்டும் பெற்றவன் ஏழையுமல்லன்.  -( ,, ) 
உங்கள் குழந்தைகளுக்கு அமைதியான வாழ்க்கை

வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அவர்களுக்கு எப்பொழுதும் கொஞ்சம் பசியும் குளிரும் இருக்கும்படி செய்யுங்கள்.  -( ,, ) 
விளையும் பயிர் முளையில் தெரியும்.  - தமிழ்நாடு  
ஆணை அடித்து வளர்க்க, பெண்ணைத் தட்டி வளர்க்க.

 -( ,, )  ஐந்துக்கு மேலே அரசனும் ஆண்டி.  - தமிழ் நாடு  (ஐந்து பெண்களுக்கு மேல் பிறந்து விட்டால், பெற்றோரின் செல்வம் காலியாகும்.) 
உன் பையனிடம் உனக்கு அன்பிருந்தால், அவனை அடித்து வளர்க்கவும்; வெறுப்பிருந்தால், தின்பண்டங்களை வாங்கி (அவன் வாயில்) திணிக்கவும்.  சீனா  
ஐந்து பெண் குழந்தைகளுள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை.  -( , , )  (குடும்பத்தின் சொத்து விரைவிலே தீர்ந்து விடும்.) கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.  -( , , ) 
பெண் பிறந்தால், வீட்டுக் கதவு நிலை நாற்பது நாள் அழும்.  -அரேபியா  
என் இதயம் என் மகனை நோக்கிச் செல்கின்றது, அவ னுடைய இதயமோ ஒரு கல்லை நோக்கிச் செல்கின்றது.

 -( , , )  
மகள் இருந்தால், தாய்க்குச் செலவு இருந்து கொண்டே யிருக்கும்.  -ஆர்மீனியா  
உன் பிள்ளைகளையும் பெண்களையும் நம்பியிருந்தால், உனக்கு இரு கண்ணும் இல்லை.  -பாமா  (நம்பியிருத்தல் வீண்.) 
தானாகத் தடுக்கி விழுந்த குழந்தை அழுவதில்லை .

 - கால்மிக்  
குழந்தைகள் நிறைந்த வீட்டில் சயித்தான் ஆள்வதில்லை.  -குர்திஸ்தானம்  
வீடு என்றால், மூன்று குழந்தைகளாவது இருக்கவேண்டும்.  -( , , )  இளமையிலே குழந்தைகள் நம் கைகளுக்கு வலியளிக்கும், முதுமையிலே மனத்திற்கு வேதனையளிக்கும்.  -ஐரோப்பிய நாடோடிகள்  வைசூரி விளையாடிய பிறகு தான், பெற்றோர்கள் குழந்தையைத் தங்கள் குழந்தையாகக் கணக்கிட வேண்டும்.  - ஆப்கானிஸ்தானம்  
நன்றியற்ற மகன் தந்தையின் முகத்திலுள்ள பரு; அதை

அப்படியே விட்டிருந்தால் விகாரம், கிள்ளியெறிந்தால் வலி.  -( , , ) 
தந்தை அழ நேருவதைவிட, குழந்தை அழுதால் அழட்டும்.  -ஜெர்மனி  
குழந்தைகளில்லாமல் வாழ்பவன் தொந்தரவுகளை அறியான், குழந்தைகளில்லாமல் மரிப்பவன் மகிழ்ச்சியை அறியான்.  -( , , )  
தாய் தன் குழந்தையைத் தழுவினால், அநாதைக் குழந்தையை ஆண்டவர் தழுவிக் கொள்கிறார்.

 - போலந்து  
குடியானவனுடைய குழந்தைகள் அவன் செல்வங்கள் ;

கனவானுடைய குழந்தைகள் அவன் கடன்கள்; பிரபுவின் குழந்தைகள் திருடர்கள்.  -( , , ) 
[முற்காலத்தில் பிரபுக்கள் குடியானவர்களைத் துன்புறுத்தி, நில புலன்களைத் தாங்களே கைப்பற்றி வந்ததால், இப்பழமொழி அவர்களுக்கு எதிராக எழுந்த துவேஷத்தைக் காட்டுகின்றது.) 

அதிகக் குழந்தைகள் இருந்தால், வீட்டுக் கூரை பிய்ந்து போய்விடாது.  -பெல்ஜியம்  
ஒரு குழந்தையுடன் நீ நடக்கலாம்; இரு குழந்தைகளுடன் சவாரி செய்யலாம்; மூன்றாகிவிட்டால் , நீ வீட்டோடு இருக்க வேண்டியது தான்.  - இங்கிலாந்து  
வளர்ப்பதற்குச் சொந்தக் குழந்தை யில்லாதவன் அதிருஷ்டமில்லாதவன்.  -அயர்லந்து  குழந்தையில்லாதவன் சும்மா குந்தியிருப்பது வீண்.
 -அயர்லந்து  
சண்டையிட இருவர், சமாதானத்திற்கு ஒருவர்.

 -ஸ்காட்லந்து  [குடும்பத்திற்கு மூன்று குழந்தைகள் போதும்.] 
கிழவர்களும் குழந்தைகளும் இல்லாத வீட்டில் வேடிக்கையும் கலகலப்பும் இருக்கமாட்டா.  -( , , )  
குழந்தை தன்னைத் தூக்கிவைத்துக் கொஞ்சுகிறவரை

அறியும்; தன்னிடம் உண்மையான அன்பு செலுத்துவோரை அறியாது.  - வேல்ஸ்  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்.
 - தமிழ் நாடு  
உன் குழந்தைகள் தீயோரா யிருந்தால், நீ அவர்களுக்குச் சொத்து வைக்க வேண்டாம்; அவர்கள் நல்லோராயிருந்தால், உன் சொத்து அவர்களுக்குத் தேவையில்லை.  -பல்கேரியா  
குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை.  -டென்மார்க்  
அருமையான குழந்தைக்குப் பிரம்பு தேவை.

 - எஸ்டோனியா  
பயமில்லாமல் வளரும் குழந்தை பெருமையில்லாமல் மரிக்கும்.  -( , , ) 
வசந்த காலம் வந்து குழந்தையை முத்தமிடுகிறது, மாரிக் காலம் வந்து அதை வதைக்கிறது.  -( , , )  
குழந்தையின் அருமை அடுத்த குழந்தை வரும்வரை.

 -( , , )  
குழந்தையின் ரொட்டியில் மணல் கலந்திருக்கும்.  -( , , )  
பெண் குழந்தை வீட்டிலிருப்பதைக் கொண்டு செல்லும், ஆண் குழந்தை (வெளியிலிருந்து) கொண்டுவரும்.  -( , , ) 
மகள் உன் முட்டளவு வளர்ந்து விட்டால், அவளுடைய சீதனப்பெட்டி அவள் மார்பளவு உயரம் இருக்க வேண்டும்.  - எஸ்டோனியா  பெண் குழந்தைகள் வீட்டுக்கு அலங்காரம், அவர்கள் விற்பனைக்குரிய பொருள்கள்.  -எஸ்டோயா  குழந்தையும் உதவிதான் செய்கிறது, ஒரு மீனைக் கழுவுவதற்குள், இரண்டு மீன்களைத் தின்னுகின்றது.
 -பின்ந்து  
மூடன் தன் குதிரையைப் புகழ்வான், பயித்தியக்காரன்

தன் மருமகளைப் புகழ்வான், அறியாதவன் தன் மகளைப் புகழ்வான்.  -( , , )  
ஒற்றைக் குழந்தை கடவுளின் தண்டனை.  -ஹங்கேரி  
ஆந்தையும் தன் மகனை இராஜாளி என்றே கருதுகின்து.  -( , , ) 
தூங்கும் பொழுது சிரிக்கும் குழந்தை தேவர்களுடன் விளையாடுகின்றது.  இதாலி  
குழந்தைகள் இல்லாதவனுக்கு அன்பு புரியாது.  -( , , )  
அதிருஷ்டமுள்ளவர்கள் மணமாகி மூன்றாம் மாதம் குழந்தையை அடைகிறார்கள்.  -லத்தின்  அதிருஷ்டமுள்ளவனுக்கு முதற் குழந்தை பெண்ணாயாருக்கும்.  -போர்ச்சுக்கல்  
மகளின் குழந்தைகள் தன் குழந்தைகளைவிட அருமையானவை.  -ரஷ்யா  
நீ தகப்பனாகாமலே வாழ்ந்தால், நீ மனிதனாக இல்லாமலே மரிப்பாய்.  -( , , )  பெண்பிள்ளை கலியாணப் பருவமடையும் பொழுதுதான்
பிறந்தவளாகிறாள்.  -( , , )  
குழந்தைகளை இதயத்தால் நேசிக்கவும்; ஆனால் கைகளால் பயிற்சி அளிக்கவும்.  -ரஷ்யா  விவாகமான பெண் குழந்தை பக்கத்து வீட்டுக்காரரைப்
போலத்தான்.  -( , , )  
குழந்தையின் கையும் பன்றித் தொட்டியும் நிறைந்தேயிருக்க வேண்டும்.  - -சுவிட்சர்லந்து  உலகிலே ஒரு குழந்தையை விட்டுச் செல்பவன் நித்தியமாக வாழ்கிறான்.  -ஆப்பிரிகா  
முதற் குழந்தை தந்தைக்குத் தோழன்.  -( , , )  
குழந்தைகள் தெய்வத்தோடு பேசுகின்றன.  -( , , ) 
கேள்விகள் கேட்கும் குழந்தை மூடக் குழந்தையன்று.  -( , , ) 
பெரிய நகருக்குச் சென்றிராத குழந்தை தன் தாய்தான்

தலை சிறந்த சமையற்காரி என்று சொல்லும்.  -( , , )  
முதலாவது செல்வம் குழந்தைகள், இரண்டாவதுதான் பணம்.  -( , , ) 
குழந்தை, ஒட்டகக்கழுத்து மாதிரி, எங்கு வேண்டு மானாலும் நுழையும்.  -( , , ) 
குழந்தைகளில்லாத எலி ஆற்றோரம் வீடு கட்டிக்கொள்ளும்.  -( , , ) 
மனிதக் குஞ்சுகள் பறக்க நாளாகும்.  -( , , ) 
குழந்தைகளே ஏழைகளின் செல்வங்கள்.  - இங்கிலாந்து  
குழந்தைகளுக்குச் செவிகள் அகலமானவை, நாவுகள் நீளமானவை.  -( , , ) 
புறாக்கள் கடலைகளைக் கொத்துவது போல், குழந்தைகள் வார்த்தைகளைக் கொத்தி யெடுத்துக் கொள்ளும். 
குழந்தைகள் இளமையில் தாயிடம் பால் குடிக்கின்றன,
முதுமையில் தந்தையிடம் (அறிவுப்) பால் குடிக்கின்றன.

 -இங்கிலாந்து  
குழந்தை யில்லாதவனுக்கு அன்பு என்ன என்று

தெரியாது.  -( , , )  
குழந்தையைக் கொண்டாடினால், தாயின் அன்பைப் பெறலாம்.  -( , , ) 
இரண்டு தொட்டில்களை ஆட்டுவதைவிட, ஒரு கலப்பையால் உழுவது மேல்.  -( , , )  குழந்தைக்கு முதற்பாடம் பணிவு.  -( , , )  தீப்பட்ட குழந்தை நெருப்புக்கு அஞ்சும்.  -இங்கிலாந்து  
நாவை அடக்கப் பழக்கிய குழந்தை விரைவிலே பேசக் - கற்றுக் கொள்ளும்.  -( , , ) 
குழந்தை பேசுவதெல்லாம் அடுப்பங்கரையில் கற்றவை.

 -( , , )  
தந்தை அழுவதைவிட, குழந்தை அழுவது மேல்.  -( , , )  
குழந்தைகளும் கோழிக் குஞ்சுகளும் எப்பொழுதும் தின்று கொண்டே யிருக்கவேண்டும்.  -( , , ) 
பகுத்தறிவு உறங்கும் காலம் குழந்தைப் பருவம். -  -ரூஸோ  
செல்லக் குழந்தைக்குப் பல பெயர்கள் இருக்கும்.

 - டென்மார்க்  
குழந்தைகளும் குடிகாரர்களும் உண்மையே பேசுவர்.

 -( , , )  
அடுத்த வீட்டுக்காரர் குழந்தைகளே எப்பொழுதும் மோசமான குழந்தைகள்.  - ஜெர்மனி  பெற்றோர்கள் நூற்பதைக் குழந்தைகள் கழியில் சுற்ற வேண்டும்.  -( , , ) 
குழந்தைகளோடு சேர்ந்து விளையாடினால், அவர்களை எப்படியும் திருப்பலாம்.  -ஜெர்மனி  
குழந்தை அழாவிட்டால், தாய்க்கு ஒன்றும் புரிவதில்லை.  -ரஷ்யா  
குழந்தையை அடித்து வளர்க்காதவன், பின்னால் தன் மார்பிலே அடித்துக் கொள்ள நேரும்.  -துருக்கி  
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel